கண்ணனை அடித்தவர்களை, அடித்து நொறுக்கும் கதிர் – விறுவிறுப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டுவதற்காக பல காட்சிகள் அதிரடியாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது மாஸ் சண்டை காட்சி ஒன்று வர உள்ளது. இதனால் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
மாஸ் சண்டை காட்சிகள்:
சின்னத்திரையில் தற்போது வரும் சீரியல்கள் அனைத்தும் வெள்ளித்திரையை மிஞ்சி விடும் அளவிற்கு கதையை கொண்டுள்ளது. அந்த வகையில் சினிமாவில் வரும் காதல், பாசம், ரொமான்ஸ், சண்டை, பகை போன்ற அனைத்தும் சின்னத்திரையில் வருகிறது. கதையில் மக்களை கவர்வதற்கான அனைத்து அம்சங்களும் இருப்பதால் மக்கள் சீரியல் பார்ப்பதை தங்களின் வழக்கமாக மாற்றி உள்ளனர். மக்களின் அன்றாட வாழ்வில் சீரியல்கள் ஒன்றி விட்டது. சீரியல் பார்க்காமல் அன்றைய நாள் முடிவடையாது என்று கூறும் அளவிற்கு சீரியல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!
அந்த வகையில் விஜய் டிவியின் அனைத்து சீரியல்களும் பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில், பாண்டியன் ஸ்டார்ஸ் அதில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போது சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. ஜனார்த்தனன் கடையில் பணத்தை திருடிய பையனை மீனா கண்டுபிடித்து விட்டதால், ஜனார்த்தனன் அந்த பையனை அடித்து அனுப்பி விடுகிறார். இதனால் அந்த பணத்தை திருடிய பையன் கண்ணனை ஆள் வைத்து அடித்து விடுகிறான். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் கடும் கோவத்தில் இருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி – வைரல் புகைப்படம்!
இதனால் கதிர் கண்ணனை அடித்தவர்களை தேடி செல்கிறான். அங்கும் கதிரிடம் அவர்கள் வம்பிழுக்க கதிர் அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்குகிறார். இதனால் அவர்கள் மீண்டும் கண்ணன் பிரச்சனைக்கு வர மாட்டார்கள் என்பது தெரிகிறது. இந்த சண்டை காட்சிகள் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இது மிகவும் பிடித்தமான காட்சியாக மாறும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் பரபரப்பாக வர இருக்கிறது என்பது உறுதியாகிறது.