ரேஷன் கடை பாமாயில் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. முழு தகவல் இதோ!
தமிழகத்தில் பெரும்பாலானோர் ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணெயில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.
பாமாயில்:
தமிழக ரேஷன் கடையில் அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இந்த பாமாயில் எண்ணெய் விலை குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இதை வாங்கி சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகளும் உள்ளது. அதாவது கண் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து தெளிவான பார்வையை இது உண்டாக்குகிறது.
ஆதார் கார்டு மூலமாக பான் கார்டில் முகவரியை புதுப்பிப்பது எப்படி? முழு விளக்கங்களுடன்!
மேலும் இதில் இயற்கையாகவே வைட்டமின் E நிரம்பியுள்ளதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை இது தடுக்கிறது. மற்றொரு புறம் இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த பாமாயில் தவிர்ப்பது நல்லது. மேலும் பாமாயில் சுத்திகரித்து பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும். பாமாயிலை நன்கு வெப்பபடுத்தி பிறகு அதனை குளிர்வித்து காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் இதனால் சத்துக்களும் வீணாகாது.