தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள், ரூ.4000 உதவித்தொகை – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 4000 ரூபாய் உதவித்தொகை 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுகள்:
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு உணவு பொருட்கள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச நிவாரண பொருட்கள், நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.சக்கரபாணி அவர்கள், இதுவரை கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000 மற்றும் இலவச மளிகை பொருட்கள் 99% வழங்கப்பட்டு விட்டது என உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மேலும் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவருக்கு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் சமையல் எரிவாயு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. முதலில் ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மொத்தமாக 20% மட்டுமே வழங்கியது. இதனால் பொதுமக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் 28,000 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாக உணவு வழங்கல் துறை மத்திய அரசிடம் தெரிவித்து. ஆனால் மத்திய அரசு 7500 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.