PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் அறிவிப்பின் படி பயனர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது இந்த சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு
மத்திய அரசால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாள ஆவணமாக வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் தற்போது பல வகையான சேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டைகளை மாத சம்பளம் வாங்குபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பான் கணக்குடன் இணைந்திருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனிடையே வருங்கால வைப்பு நிதி பயனர்களும் தங்களது PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வலியுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு உத்தரவு!
இந்த சேவைகளை PF பயனர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆதார் – PF கணக்கு இணைப்பை தற்போது வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதற்கான விரிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி PF வாடிக்கையாளர்கள்,
- முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- அங்கு UAN எண், கடவுச்சொல் கேட்கப்பட்டிருக்கும்.
- அதை சரியாக பதிவிட்டால் சரிபார்ப்புக்காக கேப்சா கோர்டுகளை கொடுத்து உள் நுழையவும்.
- பின்னர் Menu பக்கத்தில் இருக்கும் Manage ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து KYC என்பதை தேர்வு செய்யவும்.
TN Job “FB Group” Join Now
- அடுத்து புதிய பக்கம் திறக்கும்.
- இதில் ஆதார் இணைப்பு குறித்த விவரங்கள் காட்டப்படும்.
- இப்போது உங்கள் ஆதார் எண் PF கணக்குடன் இணைக்கப்படாவிட்டால் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
- பின்னர் Save கொடுக்கவும்.
- இப்போது உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த நாள் சரிபார்க்கப்படும்.
- இவை அனைத்தும் சரியாக இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட KYC அறிக்கை கொடுக்கப்படும்.
- அதாவது ஆதார் தரவுகளுக்கு கீழ் Verified என கொடுக்கப்பட்டிருக்கும்.