ரேஷன் கார்டில் இதை செய்யாவிட்டால் பொருட்கள் கிடைக்காது -மக்களே அலர்ட் !

0
ரேஷன் கார்டில் இதை செய்யாவிட்டால் பொருட்கள் கிடைக்காது -மக்களே அலர்ட் !

மத்திய அரசு ரேஷன் கார்டில் தொடர்ந்து சலுகைகளை பெற இதை கட்டாயமாக்கி உள்ளது. அது என்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கார்டு வெறும் அடையாள அட்டையாக இல்லாமல் அதில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கவும் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு வழங்கும் நிதி உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

EPFO பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வந்தாச்சு புது அப்டேட் – இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!

அதாவது ரேஷன் காரில் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய கைரேகையை பதிவு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும் இதில் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டு சரிபார்ப்பும் அடங்கும். அவ்வாறு செய்யாதவர்கள் தொடர்ந்து ரேஷன் உதவிகளை பெற முடியாது. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இது கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆறு உத்தரவாதங்களை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் கேஒய்சி சரிபார்ப்பை உடனே முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!