தமிழகத்தில் வருகிற 11ம் தேதி அன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வட்டங்கள் வாரியாக ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 11ம் தேதி அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்கள் குறைதீர் முகாம்:
தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இருக்கும் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், செல்போன் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.
Follow our Instagram for more Latest Updates
இதே போன்று ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் குறைகளையும் தெரிவிக்கலாம். அதாவது, பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 11ம் தேதி அன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில், மக்கள் குறைதீர் முகாம் மாவட்டத்தில் உள்ள செய்யூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், வண்டலூர், திருப்போரூர் உள்ளிட்ட வட்டங்களில் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 11ம் தேதி அன்று செய்யூர்-பொலம்பாக்கம், செங்கல்பட்டு-கொளத்தூர், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், மதுராந்தகம்-மங்கலம், வண்டலூர்- குமிழி, திருப்போரூர்-திருநிலை உள்ளிட்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.