அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதி – 5 நாட்கள் பட்டாசு வெடிக்கலாம். வெளியான ஹாப்பி நியூஸ்!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. அத்துடன் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இப்பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் பிப். 12 வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!
கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்க அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதி அளித்தது. இந்த பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இனி ஆண்டுதோறும் உட்டா மாகாணத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு மாகாணத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.