தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பணிகள் நிறுத்திவைப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்ப பரிசீலனை பணிகளை மேற்கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு பணிகள்:
தமிழகத்தில் அரசின் நிர்வாக பணிகளுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் சரியாக பிரிக்கப்படாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தொகுதி வாரியாக ஊராட்சி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF கணக்குக்கு செலுத்தும் வரியை தவிர்ப்பது எப்படி?
மேலும் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதனால் புதிய 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை – நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!
இதனால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் காரணத்தால் அந்த மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விண்ணப்ப பரிசீலனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.