ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் உட்பட பிற கல்வி நிறுவனங்கள் திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் உட்பட பிற கல்வி நிறுவனங்கள் திறப்பு - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் உட்பட பிற கல்வி நிறுவனங்கள் திறப்பு - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் உட்பட பிற கல்வி நிறுவனங்கள் திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் ஒட்டுமொத்த நிலைமையை கணக்கில் கொண்டு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் திறக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா புதிய பாதிப்புகளின் நிலையை ஆய்வு செய்த பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையில் நேற்று (ஜூலை 22) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – அமைச்சர் உறுதி!

இது குறித்து ராஜஸ்தான் பள்ளி கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து குழந்தைகளும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம்’ என தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் எந்த வகுப்புகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதற்கிடையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை 2021

மேலும் ராஜஸ்தானில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்பாக கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் கவனத்திற்கு – ஐவிஆர்எஸ் சேவை!

மேலும், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் நேற்று (ஜூலை 22) ஒரு நாளில் 25 புதிய பாதிப்புகள் மற்றும் ஒரு இறப்பு ஏற்பட்டுள்ளது. தவிர ராஜஸ்தானில் இதுவரை 23,538,030 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 5,908,869 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!