தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – அமைச்சர் உறுதி!
நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் எ.வ. வேலு உறுதி தெரிவித்துள்ளார்.
நிதியுதவி வழங்கல்
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்துள்ளார். அதாவது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.
Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!
இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்குபெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘தமிழகத்தில் ஆண்டு தோறும் 2,000 கிலோ மீட்டர் வரை சாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26 முதல் 9, 10 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் மரம் நடுவது, பழனி – கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவது போன்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் கீழடியில் கட்டடம் கட்டும் பணிகள் முடிவு பெற்றவுடன் அந்த பகுதிகளுக்கு செல்ல சாலை வசதிகள் உருவாக்கப்படும். மதுரையில் புதிதாக மூன்று பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி – முதல்வர் உத்தரவு!
மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னாக ஆட்சியமைத்துள்ளதான திமுக அரசு, இந்த 5 ஆண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். தற்போதுள்ள நிதி நிலைமை சீரானதும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1000 நிதியுதவி கட்டாயம் கொடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.