தமிழக அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் கவனத்திற்கு – ஐவிஆர்எஸ் சேவை!
தமிழகத்தில் அரசு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி பற்றிய தகவல்களை பெறுவதற்கு ஒரு புதிய வசதியை தமிழக நிதி கணக்காளர் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி:
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்துக் கொண்டு, அந்த தொகையை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்துகிறது. அவர்களின் பணிக்காலம் முழுவதும் இந்த தொகை சேமிக்கப்படும். அவர்கள் பணி ஓய்வு பெறும் போது பணியாளர்களின் கணக்கில் உள்ள நிதி அவர்களுக்கு வழங்கப்படும். இதனால் பணியாளர்களின் ஓய்வு காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் சிரமமில்லாமல் இருக்கும். தற்போது தமிழக அரசு பணியாளர்களின் பி.எப் கணக்கில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய செயலி – முதல்வர் உத்தரவு!
பணியாளர்களின் பி.எப் தொடர்பான விவரங்களை 24 மணி நேரமும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளின் சேவை சார்ந்த தகவல்களை ஐவிஆர்எஸ் (Interactive Voice Response System) சேவை மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று மாநில கணக்காளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு நீங்கள் 044 – 24325050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம். இந்த வசதி ஜூலை 14ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – அமைச்சர் உறுதி!
இதன் மூலம் தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது நல நிதி, தங்கள் வருங்கால வைப்புநிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதி தொகை போன்ற அனைத்து தகவல்களும் வழங்கப்படும் என்று மாநில கணக்காளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.