தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு புதிய உத்தரவு!

0
தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு புதிய உத்தரவு!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளில் தனியார், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பொது விடுமுறை அறிவிப்பு:

தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 2ஆம் கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதியம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாளில் அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.14,000 உதவித்தொகை திட்டம் – புதிய நடைமுறை அமல்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 135 ‘பி’ வாக்களிக்கும் நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. வாக்களிக்க தகுதியுள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!