குற்றவாளி செல்வத்தை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!
சரவணனின் கடையிலேயே வேலை பார்த்து பார்வதியை கடத்தி பல உயிர்களை காவு வாங்க நினைத்த செல்வத்தை சரவணனும் பார்வதியும் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி தொடரில் செல்வம்தான் அந்த தீவிரவாதி என்பதை சந்தியா கண்டு பிடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது பார்வதியை வைத்துதான் திருவிழாவில் பல உயிர்களை காவு வாங்க வேண்டுமென தீவிரவாதிகள் முடிவு செய்கின்றனர். அதன்படி பார்வதியின் உடம்பு முழுக்க வெடிகுண்டை கட்டி திருவிழாவில் வேஷம் போட்டு இறக்கி விடுகின்றனர்.
கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி – இன்றைய எபிசோட்!
எதிர்பாராதவிதமாக பார்வதி கீழே விழுகிறார். பார்வதியின் கொலுசை பார்த்து இது பார்வதிக்கு பாஸ்கர் வாங்கி கொடுத்த கொலுசு தானே அப்பொழுது இது கண்டிப்பாக பார்வதியாக தான் இருக்கும் என நினைக்கிறார். உடனே பார்வதி இருக்கும் இடத்திற்கு சந்தியா ஓடி வருகிறார். ஆனால், பார்வதி உடம்பு முழுக்க வெடிகுண்டு கட்டப்பட்டுள்ளதால் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. எப்படியாவது பார்வதியை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டுமென வெடிகுண்டு அதிகாரிகளை வைத்து அந்த வெடிகுண்டை வெடிக்க விடாமல் செய்ய சந்தியா ஏற்பாடு செய்கிறார்.
Exams Daily Mobile App Download
பார்வதி கண்டிப்பாக அனைத்து உண்மையையும் கூறி விடுவார் என செல்வம் பயப்படுகிறார். எப்படியாவது அந்த வெடிகுண்டு வெடித்தால் மட்டுமே நம்மால் இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியும் என செல்வம் நினைக்கிறார். இதேபோல கடையில் வேலை செய்யும் அந்த குட்டிப் பையனின் கோட்டிலும் பல வெடிகுண்டுகளை செல்வம் பொருத்தியுள்ளார். அந்த வெடிகுண்டை வெடிக்க விடாமல் சந்தியா எப்படி அதை கண்டு பிடிப்பார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்வம் தான் குற்றவாளி என்பதை சந்தியா மற்றும் சரவணன் இருவரும் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.