சந்தியா செய்யும் காரியங்களால் குழப்பமடையும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” சீரியலில் இன்று சந்தியா நடந்து கொள்ளும் விதம் சரவணனை மிகவும் குழப்புகிறது. அதே போல் சிவகாமி தானே தனது மகனின் வாழ்க்கையினை கெடுத்து விட்டதாக வருந்துகிறார்.
“ராஜா ராணி” சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” சீரியலில் இன்று சிவகாமி சந்தியா வீட்டு வேலைகளை செய்வதால் கோபம் அடைகிறார். அதே போல் அவருக்கு பதிலாக சரவணன் வேலை செய்தவை பார்த்து விட்டு மேலும் கோபம் கொள்கிறார். சந்தியா கூறியதால் தான் சரவணன் வேலை செய்வதாக நினைத்துக் கொண்டு இருவரிடமும் கத்துகிறார். இதனால் சந்தியாவிற்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது. சரவணன் தானாக தான் வேலை செய்ய வந்ததாகவும், சந்தியா அதற்கு காரணம் இல்லை என்றும் விளக்குகிறார்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச 2GB டேட்டா கார்டு – எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்!
பின் காலையில் சந்தியா உடை மாற்றும் போது சரவணன் வந்து விடுகிறார். இதனால் இருவரும் சங்கடம் அடைந்து விடுகின்றனர். பின், சரவணன் மன்னிப்பு கேட்டு விட்டு தான் டிரஸ் எடுக்க வந்ததாக கூறுகிறார். அப்போது சந்தியா தான் தவறாக நினைக்கவில்லை என்று கூறுகிறார். இதனால் சரவணனுக்கு குழப்பமாகிறது. விருப்பம் இல்லாமல் தன்னுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் சந்தியா எப்படி இவ்வாறாக பேசுகிறார் என்றும் யோசிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின், சந்தியா சரவணனை பற்றி யோசிக்கிறார். அவரது ஒவ்வொரு குணமும் அவரை ஈர்க்கிறது. தனது அம்மா, அப்பா புகைப்படத்தை கையில் வைத்து தனக்கு சரவணன் மூலமாக நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது என்று கூறி மகிழ்கிறார். பின், சந்தியா சரவணனை திருநீர் வைக்க சொல்கிறார். அதனை சரவணன் மறுத்து விடுகிறார். மீண்டும் மீண்டும் சொல்லி பார்க்கும் சந்தியா சட்டென்று திருநீரை வைத்து விட்டு ஓடி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.