பாஸ்கரை சந்திக்கும் பார்வதி, திருமணம் நடக்காது என மிரட்டும் விக்கி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
பாஸ்கரை சந்திக்கும் பார்வதி, திருமணம் நடக்காது என மிரட்டும் விக்கி - இன்றைய
பாஸ்கரை சந்திக்கும் பார்வதி, திருமணம் நடக்காது என மிரட்டும் விக்கி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!
பாஸ்கரை சந்திக்கும் பார்வதி, திருமணம் நடக்காது என மிரட்டும் விக்கி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பாஸ்கரை பார்க்க சென்ற பார்வதி, அப்போது அங்கே விக்கி வந்து மிரட்டுகிறார். பின் பார்வதி எனக்கு அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை என சொல்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் பாஸ்கரை பார்க்க பார்வதி வருகிறார். அப்போது பார்வதி எங்க வீட்டில் பொய் சொல்லிவிட்டு வருவது ரொம்ப கஷ்டம் என சொல்ல, பாஸ்கருக்கு பின்னால் விக்கி இருக்கிறார். பின் விக்கி எழுந்து வர பாஸ்கர் அவரை பார்த்து எப்படி இருக்கீங்க என பேசுகிறார். பின் வேண்டுமென்றே பாஸ்கர் மீது ஜூஸ் கொட்டிவிடுகிறார் விக்கி, பாஸ்கர் அதை கழுவ உள்ளே செல்ல விக்கி பார்வதியை மிரட்டுகிறார். இவனை தான் நீ கல்யாணம் செய்ய போறியா எப்படி திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்த பாக்கியா, நேரம் ஆகியதால் கோவத்தில் தொழிலதிபர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அப்போது அங்கே பாஸ்கர் வர விக்கி கிளம்பி விட்டாரா என கேட்கிறார். அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை என பார்வதி சொல்ல, அப்படியெல்லாம் இல்லை அவன் மிகவும் நல்லவன் என பாஸ்கர் சொல்கிறார். பின் பாஸ்கர் பார்வதி பேசிக் கொண்டிருக்க, அர்ச்சனாவின் தங்கை அவர்களை பார்த்து கடுப்பாகிறார். மறுபக்கம் அர்ச்சனா துணி துவைத்து கொண்டிருக்க, செந்தில் வருகிறார். அன்னைக்கு போன படத்திற்கே மீண்டும் போக வேண்டாம் என அர்ச்சனா சொல்ல, அந்த நேரம் பார்த்து ஆதி வருகிறார்.

ஆதியிடம் எந்த படத்திற்கு போறோம் என கேட்க அப்பா சமோசா சாப்பிட்ட அதே தியேட்டருக்கு தான் என சொல்கிறார். உடனே செந்தில் நான் வரவில்லை என சொல்ல, அர்ச்சனா போன படத்திற்கே மீண்டும் போகவா என நினைத்து பார்க்கிறார். ஆனால் ஆதி அதெல்லாம் இல்லை நீங்க கட்டாயம் வர வேண்டும் என சொல்கிறார். பின் அர்ச்சனாவின் தங்கை போன் செய்கிறார். பாஸ்கரும் பார்வதியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க நான் இனிமேல் உயிரோட இருக்கமாட்டேன் என சொல்லி அழுகிறார்.

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் குடும்பத்தினர், கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தரும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அர்ச்சனா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். பின் சந்தியாவும் சரவணனும் பார்க் செல்ல, அங்கே தான் சந்தியா அவருடைய அப்பாவுடன் வந்து படிப்பேன் என சொல்கிறார். நானும் ஒரு தடவை இந்த பக்கம் வரும் போது ஒரு பெண் படித்ததை பார்த்தேன் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வைத்தேன் என சொல்கிறார். அந்த பொண்ணு நான் தான் என சந்தியா சொல்ல, நமக்குள் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது என சந்தியா சொல்கிறார். பின் உங்களுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா என சரவணன் கேட்க பிடிக்கும் என சந்தியா சொல்கிறார். உடனே சரவணன் சந்தியாவிடம் ஒரு மாதிரி சிரிக்கிறார். வீட்டிற்கு வந்த சந்தியா ஏன் அப்படி சிரித்தார் என நினைத்து பார்க்க, எனக்கு அவரை போல அழகாக சிரிக்கும் குழந்தை பிடிக்கும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!