மனித வெடிகுண்டாக மாறிய பார்வதி, காப்பாற்றுவாரா சந்தியா? “ராஜா ராணி 2” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதியை காணாமல் குடும்பமே தவித்து வரும் நிலையில் பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்றி கோவில் திருவிழாவில் வெடிக்க வைக்க செல்வம் மற்றும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் திட்டமிடுகின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில், பார்வதியை செல்வம் கடத்தி வைத்திருக்க செல்வம் ஒரு தீவிரவாதி என தெரியாமல் சந்தியாவும் சரவணனும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பின் செல்வத்தை பிடிக்க சந்தியா நெருங்கி இருந்தாலும் அவர் சந்தியாவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார். அதனால் சந்தியா வருத்தமாக இருக்கிறார். சந்தியா எப்படியாவது பார்வதியை கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் திருவிழாவிற்கு ஊரில் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
குடி போதையில் தன் மனைவி பாக்கியா என்ற உண்மையை உளரும் கோபி – ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன?
அப்போது பார்வதியை கோவில் அருகே செல்வமும் அவருடைய இயக்கத்தினரும் அழைத்து வருகின்றனர். செல்வம் பார்வதியை மனித வெடிகுண்டாக பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம் எங்களது இயக்கத்திற்கு பெரிய மரியாதை கிடைக்க போகிறது என சொல்கிறார். பார்வதியை பொய்க்கால் குதிரையில் இருக்கும் மயில் போல வேடமிட்டு வாய்யை கட்டி நிற்க வைக்கின்றனர். அப்போது சரவணனும் சந்தியாவும் பார்வதியை தேடி அலைகின்றனர்.
Exams Daily Mobile App Download
சந்தியா பார்வதி நீ எங்கே இருக்கிறாய் என வருத்தத்துடன் தேட அப்போது பார்வதியால் பேச முடியாத நிலைமை இருக்கிறது. பார்வதி, அண்ணி நான் இங்கே தான் இருக்கிறேன் என சொல்ல வருகிறார். ஆனால் சொல்ல முடியாமல் இருக்கிறார். அப்போது நடனம் ஆடும் ஒருவர் இடித்து பார்வதி கீழே விழுகிறார். அப்போது பார்வதியின் மெட்டியை பார்த்து சந்தியா அடையாளம் கண்டுபிடிக்கிறார். பார்வதி என சந்தியா கத்திக் கொண்டு வர கோபுரத்தில் இருந்து செல்வம் பார்த்து கோபப்படுகிறார். சந்தியா பார்வதியை காப்பாற்றிவிடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.