சந்தியாவை வீட்டை விட்டு துரத்துவதாக சவால் விட்ட அர்ச்சனா – “ராஜா ராணி 2” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அர்ச்சனா செய்தது எல்லாத்தையும் மன்னித்து சிவகாமி ஏற்றுக் கொண்ட நிலையில், சந்தியாவை பழிவாங்க அர்ச்சனா செய்த காரியம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் சென்ற வாரம் முதல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா தான் வீட்டில் நடந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என தெரிந்தும் அர்ச்சனாவை வீட்டில் தங்க வைத்திருக்கின்றனர். இந்நிலையில் அர்ச்சனாவின் முழு கோவமும் சந்தியாவின் பக்கம் இருக்கிறது. சந்தியாவை பழி வாங்க வேண்டும் என நினைத்து அர்ச்சனா பல திட்டங்களை தீட்டுகிறார். இந்நிலையில் சிவகாமி தன்னுடைய புடவையை கொடுத்து சந்தியாவை துவைக்க சொல்கிறார்.
சந்தியா நல்லபடியாக துவைத்து வைக்க அதை அர்ச்சனா எடுத்து கிழித்துவிடுகிறார். இந்நிலையில் சிவகாமி அதை பார்த்து என்ன செய்ய இருக்கிறார் என்பது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சிவகாமி தனது புடவை கிழிந்து இருப்பதை பார்த்து கோபப்படுகிறார். அப்போது சந்தியாவிடம் வந்து உன்னை துவைக்க சொன்னதற்கு இப்படி எல்லாம் செய்து இருக்கிறாய் என கேட்க, நான் செய்யவில்லை என சந்தியா சொல்கிறார்.
பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
இதை நீயே வைத்துக் கொள் என சிவகாமி பேச அர்ச்சனா தான் இந்த வேலையை செய்திருப்பாள் என சந்தியா சந்தேகப்படுகிறார். அவர் அர்ச்சனாவிடம் சென்று நீ தான் இந்த வேலையை செய்திருப்பாய் என எனக்கு நன்றாக தெரியும் என சொல்ல, இது வரும் ட்ரைலர் தான் இன்னும் நிறைய இருப்பதாக அர்ச்சனா சொல்கிறார். முடிந்தால் செய்து பார் என சந்தியா அர்ச்சனாவிடம் சவால் விட்டு சென்றுவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.