கர்ப்பமாக இருப்பதால் “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா? அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில், சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்களுக்கு தனது யூடுப் சேனலில் பதில் அளித்து இருக்கிறார்.
ராஜா ராணி 2:
விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் நல்ல புகழ் உண்டு. அதை வாய்ப்பாக பயன்படுத்தி பல மாறுபட்ட கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் படித்த பெண் படிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய எதிர்கால கனவை எப்படி அடைகிறார் என்பதை கதையாக கொண்ட சீரியல் தான் ராஜா ராணி 2.
ஆளே மாறி விட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஃபரீனா – அவரே வெளியிட்ட பதிவு!
இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும் கதயநாயகியாக ராஜா ராணி சீரியலில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஆல்யா மானசா நடித்து வருகிறார். திருமணம் முடிந்து முதல் குழந்தை பிறந்ததற்கு பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து அவர் சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஆல்யா மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் நேரலையில் ஒருமுறை தெரிவித்திருந்தார். மேலும் ஆல்யாவும் அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதிபடுத்திய நிலையில், அப்போ சீரியலில் இருந்து ஆல்யா விலக இருக்கிறாரா என பல தரப்பில் கேள்விகள் எழுந்தது.
“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு இடைவெளி விட்ட பாரதி அருண் – மணாலியில் குதூகலம்!
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆல்யா மற்றும் அவரது கணவர் சஞ்சய் அவர்களது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் இரண்டாவது முறை கர்ப்பம் என்பது எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. தற்போது ராஜா ராணி 2 சீரியல் நல்ல ரீச்சில் இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகாமல் கதையில் மாற்றம் செய்து பார்த்துக் கொள்ளலாம் என இயக்குனர் சொன்னதாக சொல்கிறார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக வந்த தகவல் பொய்யானது என விளக்கமளித்துள்ளனர்.