ஆளே மாறி விட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஃபரீனா – அவரே வெளியிட்ட பதிவு!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் வில்லியாக மனதில் மனதில் பதிந்து விட்ட ஃபரீனா தனது பிரசவத்திற்கு பிறகு, இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்ப்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்டது.
வெண்பாவின் போட்டோ:
பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகியை போல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளவர் வில்லியாக நடித்து வரும் நடிகை ஃபரீனா. இவரது வெண்பா கதாபாத்திரம் வில்லியாக அதிக வெறுப்பை சம்பாதித்தது. இதுவே அவருக்கு கிடைத்த வெற்றி. பாரதி கண்ணம்மா தொடரின் நடிகர், நடிகையர் அனைவருமே பிரபலமாகி உள்ள போதிலும், இவர்கள் மிக முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். தற்போது வேறு காரணங்கள் காரணமாக கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் புதிதாக வினுஷா என்ற நடிகை நடித்து வருகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ அருண் மற்றும் ரோஷினிக்கு இடையிலான ஒற்றுமை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இதேபோல், பிரசவ காலத்தை ஒட்டி ஃபரீனாவும் சீரியலில் இருந்து விலக உள்ளதாக பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் ஃபரீனா தான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் உறுதியாக கூறி விட்டார். இவருக்காக கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. ஃபரீனா சில வாரங்கள் ஓய்வு முடிந்து வரும் வரையில் வெண்பா கதாபாத்திரம் சிறையில் இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் போது வெண்பாவின் வில்லத்தனம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு இடைவெளி விட்ட பாரதி அருண் – மணாலியில் குதூகலம்!
இந்நிலையில், சமீபத்தில் தான் பிரசவம் முடிந்து ஓய்வில் இருந்து வரும் ஃபரீனா, நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் மேக்கப் ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகு ஃபரீனா ஆளே மாறி விட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர். ஃபரீனா அந்த பதிவை சில பொருட்களின் விளம்பர ப்ரமோஷனுக்காக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபரீனாவின் ரசிகர்கள் அவர் எப்போது மீண்டும் வெண்பாவாக மாறி பாரதி கண்ணம்மா சீரியலில் தோன்றுவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.