“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு இடைவெளி விட்ட பாரதி அருண் – மணாலியில் குதூகலம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்த அருண் மணாலி சென்று விடுமுறை நாட்களை கொண்டாடி வருகிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் வரிசையில் இருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் ஒன்றி இருப்பதால் மக்களிடம் நல்ல புகழில் இருக்கின்றனர். அந்த வகையில் சீரியலின் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகியதற்கு பின் தற்போது நடிகை வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை கொடுத்து வருகிறார்.
பழைய கண்ணம்மா விலக்கலுக்கு பின் சீரியல் TRP குறைந்துள்ளது. அதை சரி செய்ய கதையில் சுவாரசியம் அதிகரிக்க பல திருப்பங்களை கொண்டுவந்துள்ளன. அதன் படி பாரதி இன்னும் சில நாட்களுக்கு கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ இருக்கிறார். அவர் கண்ணம்மாவை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் நோக்கமாக இருக்கிறது. இப்படி பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் படப்பிடிப்பு இடைவெளியில் மணாலி சென்றுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
அங்கே மனதிற்கு அமைதி தரும் பல சாகசங்களை செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது பலூன் போட்டில் சவாரி செய்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பாரதி கண்ணம்மா ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. மேலும் அருண் ரோஷினி போல சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.