சரவணனின் கடைக்கு சீல் வைக்கும் அரசு அதிகாரி, சந்தியாவின் புத்திசாலித்தனமான நடவடிக்கை – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று லட்சம் கேட்டு தராத காரணத்தினால் அரசு அதிகாரி சரவணனின் கடையை மூடி சீல் வைக்கின்றனர். அப்போது அனைவரும் சந்தியாவிற்கு எதிராக பேசுகின்றனர். இறுதியாக சந்தியா ஆதாரத்தை அனுப்பியதான் அடிப்படையில் உயர் அதிகாரிகள் வந்து கடையை திறந்து, லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தனர்.
ராஜா ராணி:
இன்று “ராஜா ராணி” சீரியலில் லட்சம் கேட்டு வந்த அரசு அதிகாரியிடம் சந்தியா கொடுக்க முடியாது என கூறியுள்ளார். பார்வதியை சரியாக காய்கறிகள் வெட்ட சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு சர்க்கரை அழுதுகொண்டே வருகிறான். அனைவரும் பதற்றத்துடன் சர்க்கரையிடம் விவரங்களை கேட்க அவன் அரசு அதிகாரி லஞ்சம் கொடுக்காத காரணத்தால் கடையை மூடிவிட்டார் என தெரிவிக்கிறான். இதனை கேட்டதும் சரவணன் உடைஞ்சு போய் அமர்கிறார்.
ராதிகாவிற்கு ஆறுதல் சொல்லும் கோபி, அதனை பார்த்து கடுப்பான எழில் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!
அனைத்திற்கும் காரணம் சந்தியா தான் என குறைகூற சரவணன் ஏதும் பேச முடியாமல் அழுது கொண்டே இருக்கிறான். அனைவரும் கடைக்கு சென்று பார்க்க அந்த அதிகாரி கடையை மூடி சீல் வைக்கிறார். உடனே சந்தியா இப்படி எல்லார் முன்னாடியும், லஞ்சம் கேட்க வெக்கமாக இல்லையா என அரசு அதிகாரியை கேட்கிறாள், பின்னர் சரவணாவும் உன்னை எங்க பார்க்கணுமோ அங்க கவனிக்கிறேன்னு மிரட்டுகிறார். உடனே சரவணனின் குடும்பத்தினர் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் மனசு மாறாத அதிகாரி பொண்டாட்டி பேச்சை கேட்ட இந்த நிலை தான் வரும் அப்படி சொல்ல, உடனே அங்கே ஒரு கார் வருகிறது. அதில் சில அதிகாரிகள் வந்து சீல் வைப்பதற்கான காரணத்தை கேட்கின்றனர். தரமான உணவை தயாரிக்கவில்லை அதன் சீல் வைத்தேன் என்று சொல்ல, அதற்கு ஆதாரம் உள்ளது என அவர் கூறுகிறார். ஆதாரம் எதுவும் தேவையில்லை என்று வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதில் லட்சம் கேட்டு அந்த அதிகாரி தெரிவித்த வீடியோ உள்ளது. எனவே உயர் அதிகாரி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டு கடையை திறக்கிறார். சந்தியாவின் தைரியமான செயல் குறித்து அனைவரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். இதனால் சந்தியாவும், சரவணனும் மகிழ்ச்சி அடைகின்றனர். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!