10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரயில்வேயில் வேலை – விண்ணப்பிக்க ஜன.17 கடைசி நாள்!
மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விளையாட்டு பிரிவின் கீழ் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ரயில்வே வேலை:
மத்திய அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் துறை சார்ந்த போட்டித் தேர்வுகள் மற்றும் நேரடி முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு பிரிவின் கீழ் குரூப் சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
நிர்வாகம்: தெற்கு மத்திய ரயில்வே
காலியிடங்கள்: 21
பணி: விளையாட்டு பிரிவு குரூப் சி
சம்பளம்: ரூ.5,200 – 20,200
தகுதி: 10, 12 அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதனை படைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க www.scr.indianrailways.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500. SC, ST உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு விளையாட்டு சோதனை, விளையாட்டு சாதனை மற்றும் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2022
இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் அல்லது https://www.ifinish.in/rrc_