ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் வெளியிட்ட புதிய அறிவிப்பு இதோ.
கூடுதல் ரயில் பாதை:
தமிழகத்தில் வழக்கமாக சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரயில்களில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமானதாகும். இருப்பினும் சிலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் பயணம் செய்து வருகின்றனர். இதை தடுக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் புதிய ஏற்பாடுகள் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி விலை கடும் உயர்வு – ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு? அமைச்சர் முக்கிய தகவல்!!
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கவும், காத்திருக்கும் சிரமத்தை குறைக்கவும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு புதிய ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு இணையான கூடுதல் ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 வழிச்சாலைகளுக்கான வேலை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் , 4 வழிச்சாலைகளுக்கான வேலை முடிக்க 9 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இனி பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.