தமிழகத்தில் இன்று (செப். 12) முதல் 5 ரயில்கள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் பலர் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களை நாடி செல்கின்றனர். அந்த வகையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக இன்று (செப். 12) முதல் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
பணக்கார மக்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை தொலைதூர பயணம் செய்ய ரயில் பயணம் தான் சிறந்ததாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ரயில் டிக்கெட்டுகள் விலை குறைவாக இருப்பதால் பலதரப்பு மக்கள் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும் ரயிலில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் ஆபத்து குறைவாக இருக்கிறது. அதனால் மக்களின் விருப்பமான ஒன்றாக ரயில் பயணம் இருக்கிறது. இந்நிலையில் சில ரயில் தடங்களில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதனால் ஒரு சில ரயில் விபத்துகளை தவிர்க்கலாம். அந்த வகையில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்பத்தூர் போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி இன்று (செப். 12) நடைபெற இருக்கிறது. இந்த பராமரிப்பு பணியானது அக்டோபர் 18 ஆம் தேதி வரை 37 நாட்களுக்கு நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் இயங்கும் குறிப்பிட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அதன் படி பிலாஸ்பூர்- எர்ணாகுளம் வாராந்திர ரயில் (22815) இன்று முதல் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் கோவைக்கு செல்லாமல் மாற்றுப் பாதையாக இருகூர்-போத்தனூர் மார்க்கத்தில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22630) செப். 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளிலும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22619) செப். 13, 20, 27, அக்டோபர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் கோவைக்கு செல்லாமல் இருகூர் -போத்தனூர் வழியே இயக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22670) செப் 13,20 ,17, அக்டோபர் 4, 11, 18 தேதிகளிலும், செகந்தி ராபாத்-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07189) செப் 16, 23, 30, அக்டோபர் 7, 14 தேதிகளில் கோவைக்கு பதிலாக மாற்றுப்பாதையாக இருகூர்-போத்தனூர் வழியே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ரயில்களும் கோவை ரயில் நிலையத்திற்கு போத்தனூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்