பாக்கியா தொழிலை தொடங்க கணவரை சந்திக்க வரும் ராதிகா, சிக்கப்போகும் கோபி – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மீது ராதிகா கோவப்பட்டது தவறு என நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் பாக்கியாவை ராதிகா சந்தித்து பேச இருக்கிறார். அதன் பின் பாக்கியா மீண்டும் தொழிலை செய்ய வேண்டும் என்பதால் பாக்கியாவின் கணவரிடம் ராதிகா பேச இருப்பதாக அடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் தற்போது வருகிறது. பாக்கியா தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்க குடும்பத்தில் அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர். ஆனால் கோபி தொழிலை செய்ய வேண்டாம் என உறுதியாக இருக்கிறார். அதனால் பாக்கியாவால் என்ன செய்வது என தெரியவில்லை. இந்நிலையில் இனியாவும் செழியனும் சொன்னதை அடுத்து பாக்கியா தொழிலை நிறுத்த முடிவு செய்கிறார். வருத்தப்பட்டு அலுவலகத்தில் பொருள்களை எடுத்து வைக்கிறார்.
ExamsDaily Mobile App Download
இந்த தொழில் தொடங்கும் போது எவ்வளவு சந்தோசம் இருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை என அழுது கொண்டே பொருள்களை எடுத்து வைக்கிறார். நாளைய எபிசோடில் ராதிகாவும் பாக்கியாவும் சந்தித்து கொள்ள இருக்கின்றனர். அப்போது பாக்கியா நான் தவறு செய்யாமல் இருந்தாலும் செய்ததாக பேப்பரில் போட்டார்கள். ஆனால் அது தவறு என நிரூபணம் செய்த பின் எந்த செய்தியிலும் இது பற்றி போடவில்லை என வருத்தப்பட்டு பேசுகிறார்.
குழந்தை பிறக்க போவதை நினைத்து கனவு காணும் கதிர் & முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் என்னுடைய வீட்டில் இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதாக வருத்தப்பட்டு பேசுகிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அடுத்து வரப் போகும் எபிசோடில் ராதிகா பாக்கியாவிற்கு உதவி செய்ய இருக்கிறார். அதன்படி பாக்கியாவின் கணவரை சந்தித்து தொழில் மீண்டும் தொடங்க வேண்டும் என சொல்லப் போவதாக கோபியிடம் சொல்ல அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்கியாவின் கணவரை பார்த்தல் கோபி மாட்டிக் கொள்வார் என்பதால் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் பல சுவாரசியம் வர இருக்கிறது.