பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் கதை என்னவாக முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலகி மும்பைக்கு செல்ல ராதிகா முடிவு செய்வது போல பரபரப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

சமீப காலமாக பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளில் முற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம் அரங்கேற இருக்கிறது. அதாவது, கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட ராதிகா அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறார். இப்போது, ராதிகாவின் மன்னிப்புக்காக அவரது வீட்டுக்கு சென்று அடிபட்டு திரும்பும் கோபி, ராஜேஷிடம் மாட்டிக் கொள்கிறார். இதற்கிடையில் மயூவின் கஸ்டடி கேஸ், போலீஸ் விவகாரம் என ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் ஒரு சில எபிசோடுகளாக வேறு பாதையில் பயணித்தது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில், கோபியை திருமணம் செய்து கொள்வதாக எழுதிக்கொடுத்து இந்த கேசில் இருந்து தப்பித்து கொள்கிறார் ராதிகா. இதனால், ராதிகா தனக்கு தான் என கோபி எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் ஒரு அதிரடியான முடிவு எடுப்பது போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் பாக்கியாவின் வாழ்க்கைக்காக கோபியை விட்டு விலக ராதிகா முடிவு எடுப்பது போல அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது, பாக்கியாவை தனியாக சந்திப்பதற்காக கோவிலுக்கு வர சொல்லும் ராதிகா, தான் நிரந்தரமாக மும்பைக்கே ட்ரான்ஸ்பர் வாங்கி விட்டு செல்ல இருப்பதாக கூறுகிறார்.

விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கும் சித்து ஸ்ரேயா? வலுக்கும் கோரிக்கை!

அதற்கு, நீங்கள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தீர்களே அது என்ன ஆயிற்று என்று பாக்கியா கேட்க, அத விடுங்க நீங்கள் உங்கள் வீட்டில் எதோ பிரச்சனை என்று சொன்னீர்களே அது சரி ஆகிவிட்டதா என்று ராதிகா திரும்ப கேள்வி கேட்கிறார். அப்போது, அது சரியாகிவிட்டதா இல்லையா என்று எனக்கே புரியவில்லை என்று பாக்கியா பதில் சொல்கிறார். இதை கேட்டதும், நீங்கள் கவலைப்படாதீர்கள் டீச்சர் இனி உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறுவது போல வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!