பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் – முதல்வர் துவக்கி வைப்பு!
பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவிகளின் வசதிக்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலவச பேருந்துகள்:
புதுச்சேரி பள்ளிகளில் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவை ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இலவச பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக புதுச்சேரியில் மாணவர்களுக்கான இலவச பேருந்துகளை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.