பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.2.43 சரிவு – வாட் வரி குறைப்பு எதிரொலி!
புதுச்சேரி அரசு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து தாக்கல் செய்துள்ள மசோதாவிற்கு புதுவை துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.43 குறைந்துள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து சில்லறை விற்பனை செய்யும் போது இந்த எரிபொருட்களின் மீது மதிப்பு கூட்டு வரியை விதிக்கின்றன. இந்த நிலையில், பல இடங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
இதனை அடுத்து எப்போது இந்த பெட்ரோல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெட்ரோல் மீதான மாநில அரசு வரி 3 ரூபாய் குறைக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் நிதியமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இந்த விலை குறைப்பு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் நடந்து வரும் சட்டப்பேரவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.43 ரூபாய் குறைக்கப்பட்டு, புதுச்சேரியில் ஒரு லிட்டர் 99.52 ரூபாய் ஆகவும் காரைக்காலில் 99.30 ரூபாய் ஆகவும் விற்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மசோதாவிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதோடு சேர்த்து பிற மாநிலங்களான, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்டவைகளும் இந்த எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது.