பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை:
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பரவலை தடுத்து நிறுத்தினர். இதனால் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி சில மாநில அரசுகள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் திறந்தனர். மாநிலங்களில் சிலர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே 9 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
அதனை தொடர்ந்து தற்போது பஞ்சாப்பில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.