பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனவும் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக எனவும் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பின்னர் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் வகுப்புகள் முழு நேரமாக வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – மநீம தேர்தல் அறிக்கை!!
இதற்கு முன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
In all private schools they are conducting special classes on Sunday also…