இனி ஒவ்வொரு வருடமும் மாநில காவல்துறையில் 2100 காலிப்பணியிடங்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
பஞ்சாப் மாநில காவல் துறையில் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கையும் தற்போது தொடங்கியுள்ளது. பல நாட்களாக வேலை தேடி வந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலையை பெற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசும் தனது காவல் துறையின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அம்மாநிலத்தின் முதல்வர் பகவத் மான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் காவல் துறையில் காலியாக உள்ள 1800 கான்ஸ்டபிள் மற்றும் 300 சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தமுள்ள 2100 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய அம்மாநில நிதி அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப் காவல் துறையின் கீழ் உள்ள மேற்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்திய விமானப்படையின் “Garud commando force” – பெண்களுக்கு அனுமதி! வெளியான முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு செப்டம்பரில் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். அடுத்ததாக பஞ்சாப் NCC-யில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 200 பணியிடங்கள் உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.