ரூ.89890/- சம்பளத்தில் தேர்வில்லாமல் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Chief Security Officer பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Punjab and Sind Bank |
பணியின் பெயர் | Chief Security Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Punjab and Sind Bank காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chief Security Officer பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.
Chief Security Officer தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் விண்ணப்பதாரர்கள் இந்திய Army / Navy / Air Force களில் குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரிபவர்கள் அல்லது IPS அதிகாரிகள் போன்ற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Punjab and Sind Bank வயது வரம்பு:
01.04.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 35 வயது என்றும் அதிகபட்சம் 55 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
Chief Security Officer ஊதிய தொகை:
Scale of Pay is Rs. 89890 -2500/2- 94890 -2730/2- 100350 என்கிற ஊதிய அளவின் படி தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை வழங்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Punjab and Sind Bank விண்ணப்ப கட்டணம்:
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150 + GST மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850 + GST விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Chief Security Officer தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் நேரடியாக Interview / interaction க்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
Punjab and Sind Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் விரைவு தபால் மட்டுமே செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு 08.04.2022ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.