புதுச்சேரியில் வருகிற ஜன. 25 ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை என அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுபான கடைகள் மூடல்
புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
அந்த வகையில் நாளை மறுநாள் (ஜன. 25) வள்ளலார் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினம் புதுச்சேரியில் சாராயம்- கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.