புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்ட ஆலோசனை – அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி காரைக்காலில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்:
புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாக கூட்ட அரங்கில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குநர் மதன்குமார் தலைமை வகித்தார். மேலும் மேல்நிலை கல்வி துணை இயக்குநர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி பி. விஜயமோகனா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அப்போது உதவி இயக்குனர் பேசுகையில், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதற்காக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை இணைத்து தனித்தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் புதிதாக வாங்க தேவையில்லை. பழைய நகல்களை கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.10 கடைசி நாள்!
அரசு இதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. அதை சரியான பயன்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை அக்.31ம் தேதிக்குள் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.