‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் பயனர்கள் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்

நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இவ்வகை சேவைகளின் மூலம் ரேஷன் அட்டை பயனர் ஒருவர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக குடும்ப அட்டைதாரரின் ஆதார் எண், ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.27 இல் பள்ளிகள் திறப்பு – நடுநிலை வகுப்புகள் செப்.20 தொடக்கம்!

இந்த ரேஷன் கார்டு திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 1 ஆம் தேதி அன்று மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டமானது, தொழில் நிமித்தமாக அல்லது வேறு சில காரணங்களுக்காக மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்லும் தொழிலாளா்களின் உணவு பாதுகாப்பு கருதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் ரேஷன் திட்டத்தை பெற்றுக்கொள்ள தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்ட குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையை பெற்றிருக்க வேண்டும். இப்போது, பொருள்களை பெற்றுக்கொள்ளும் முன்னதாக பயனர்கள் தங்களது ஆதாா் அட்டை எண், கைரேகை பதிவுகளை கொடுத்தால் அனைத்து ரேஷன் கடைகளில் இருந்தும் அரிசி , கோதுமையை அவர்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரே நாளில் நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி – பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை!

ஆனால் வேறு மாநிலத்தில் ரேஷன் பொருட்களை பெற பயனர்கள் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ. 3, கோதுமை ஒரு கிலோவுக்கு ரூ. 2ம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த அளவீடுகளை தாண்டாமல் ஒரே முறையிலும் அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக தவணையாக பொருட்களை பெறும் பயனர்கள் வெவ்வேறு மாநிலத்திலும் உணவுப் பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் அரிசி, கோதுமை தவிர மற்ற பொருட்களையும் அதற்குரிய விலை கொடுத்து பெற்று பயனடையலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!