பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் – RBI கவர்னர் தகவல்!!
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அரசுடன், ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள்:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரித்து. இதனை சரி செய்யும் நோக்கில் மத்திய பட்ஜெட்டின் போது லாபம் ஈட்டாத பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்று லாபம் ஈட்டப்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்காக வங்கிகளை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலமாக அரசு ரூ.1.75 லட்சம் கோடி முதலீடு ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் கூறுகையில், அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, நிதி நிலைமையில் மோசமாக இருக்கும் வங்கிகள் மட்டுமே மாற்றப்படும் என தெரிவித்தார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6 காஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின் இலவசம் – முதல்வர் வாக்குறுதி!!
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் பொதுத்துறை வங்கி மூலமாக செயல்பட்டு வரும் நேரத்தில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவது தேசத்தின் நலனுக்கு விரோதமானது”, என தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறும் வழிமுறைகள் – மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!!
அதில் பேசிய RBI கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், “மத்திய அரசுடன் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வந்தாலும் பொருளாதார நடவடிக்கைளை புதுப்பிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது”, என அவர் தெரிவித்தார்.