தமிழகத்தில் நாளை (பிப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் மாநில முழுவதும் இல்லாமல் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் விழாக்கள், பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறை நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா நடக்க உள்ளது.
பிப்ரவரி 17 முதல் பள்ளிகள், அங்கன்வாடிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!
இந்த கந்தூரி விழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை (பிப்ரவரி 16ம் தேதி) அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும். இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில் நாளை தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.