மே 31ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
கேரளா மாநிலத்தில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வரும் மே 31ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திருக்காக்கரா சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
மே 31ம் தேதி அன்று கேரளா மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள திருக்காக்கரா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக திருக்காக்கரா சட்டமன்ற தொகுயில் மே 31ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
அதே வேளையில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க தொழிலாளர் ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர வெளியில் வசிக்கும் தொகுதி வாக்காளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும், தேர்தல் பொறுப்பாளர்களுடன் பல்வேறு சந்திப்புகளில் கலந்து கொண்ட அவர், வாக்கு எண்ணும் மையமான எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி நூலக மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் பல்வேறு வாக்குச்சாவடிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கிரிஷ் சர்மா மற்றும் ஆர் ஆர் என் சுக்லா ஆகியோருடனும் கவுல் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்போது சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை அவர் திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.