நாளை (பிப்.5) பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் உத்தரவு வெளியீடு!
பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில், பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பொது விடுமுறையை பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது விடுமுறை அறிவிப்பு:
பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் கராச்சியில் நாட்டின் நான்கு மாகாணங்களில் சிறந்ததாக சிந்து மாகாணம் அமைத்துள்ளது. இம்மாகாணத்தில் பெருமளவில் சிந்தி மக்கள் வசிக்கின்றனர். பாகிஸ்தானில் வருடந்தோறும் பிப்ரவரி 5ம் தேதி அன்று இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (IOJK) மக்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவின் செய்தியை தெரிவிக்க காஷ்மீர் தினம் கடைபிடிப்பது வழக்கம். இதற்கு முன்னதாக, டிசம்பர் 2021 இல், மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் விருப்ப விடுமுறைகள் பற்றி வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 5 ஆம் தேதியை பொது விடுமுறையாகக் குறித்தது.
அதன்படி நாளை காஷ்மீர் ஒற்றுமை தினத்தை கடைபிடிப்பதற்காக பொது விடுமுறை அறிவித்து பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை கடைப்பிடிக்கும், சிந்து மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவை பிப்ரவரி 5ம் தேதியன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதியை பொது விடுமுறையாக ஏற்கனவே அறிவித்துள்ள மத்திய அரசு இம்மதத்திற்கான விடுமுறை பட்டியலில் இந்த நாளை சேர்த்து மீண்டும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.62,000 வரை ஊதியம்!
மேலும் பாகிஸ்தானில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அந்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் சிந்து மாகாணம் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு தற்போது அதனை நீடிக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில், குடியரசு தினத்தன்று அப்பாவி காஷ்மீரிகளை இந்தியக் கொடிகளை ஏற்றும்படி வற்புறுத்துவது தவறான நிலை மற்றும் நம்பிக்கையற்ற முயற்சியை வெளிப்படுத்தும் இந்தியாவின் சிறப்பியல்பு என்று சிந்து மாகாண செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.