TN TRB காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பிப்.12, 13 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கணினி வழி தேர்வுக்கான கால அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. அரசு பள்ளிகளில் டெட் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
ரெய்னாவை ஒதுக்கும் தோனி? பல ஆண்டுகால நட்பில் உருவான விரிசல்! ஷாக்கிங் தகவல்!
இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி வரும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 கணினி பயிற்றுநர்கள் நிலை ஆகிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.62,000 வரை ஊதியம்!
12.02.2022 முதல் 15.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் 14 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். 16.02.2022 முதல் 20.02.2022 வரை 4 நாட்களுக்குரிய ஆங்கிலம் , கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. . இத்தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.