தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – ரூ.62,000 வரை ஊதியம்!
தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மக்கள் கொரோனா மூன்றாம் அலையிலிருந்தும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் வேலை வாய்ப்பு என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒத்திவைக்கப்பட்ட அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் முக்கிய பதவிகளுக்கான UPSC யின் முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
அதன்படி அண்மையில் காப்பீடு முகவர் பணிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. கோயம்புத்தூர் – 11 காலியிடங்களும் ஈரோடு -2 காலிப்பணியிடங்களை , நீலகிரி -1 பணியிடமும் சேலம் மேற்கு – 2 கலிப்பாணியிடமும் திருப்பூர் – 1 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 17 கார் டிரைவர் பணியிடங்கள் உள்ளது.
12 வது தேர்ச்சி பெற்றவரா? ரூ.31,852/- ஊதியத்தில் 300க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப்பணியிடங்கள் !
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பு 56 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உங்களின் சுயவிவர குறிப்புடன் உரிய சான்றிதழ்களை இணைத்து The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore – 641 001 என்ற முகவரிக்கு மார்ச் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதியுடையோர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு மாதம் ஊதியமாக 18,000 முதல் 62,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.