தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!
தமிழகத்தில் 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை:
தமிழ்நாட்டில் சென்ற வருட இறுதியில் கொரோனா கட்டுப்பாடு குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதலில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி ஆரம்பிக்க பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் கட்டாயமான முறையில் பொதுத்தேர்வுகள் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறி இருந்தனர். அது மட்டுமல்லாமல் பொதுத் தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!
இவ்வாறு இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைய விடுமுறைகள் வந்த காரணத்தால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தள்ளி போய்விட்டன. அதனால் பிப்ரவரி மாதம் தான் அந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் இதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு தகவலை தெரிவித்து உள்ளார்.
அது என்னவென்றால், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் நடப்படும் என்று முன்னரே தெரிவித்து இருந்த நிலையில் தற்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான தேதிகள் நாளை அறிவிக்கப்படும் என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.