மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஓதுவார் பயிற்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – மாணவர் படுகாயம்!
மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஓதுவார் பயிற்சி பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பள்ளியில் பயின்று வந்த மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி விபத்து
சமீப காலமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்களில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு சில மாதங்களுக்கு முன்பாக கூட, திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவர்கள் சிலர் பரிதாபகரமாக பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
100 நாள் வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ‘இது’ கிடையாது!
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் தரம் பார்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், அரசு அறிவுறுத்தலின் படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும் இந்த விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஓதுவார் பயிற்சி பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பள்ளியில் பயின்று வந்த மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி இலவசமாக செல்லலாம்!
அதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த புனித ஸ்தலமான மீனாட்சி அம்மன் கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளியின் மேற்கூரை தற்போது இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது, அந்த பயிற்சி பள்ளியில் பயின்று வந்த ஜெயராமன் என்ற மாணவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.