கடவுளின் அருளால் கர்ப்பமான முல்லை, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்றைய எபிசோடில் முல்லை குழந்தை வரம் வேண்டும் என நினைத்து கோவிலுக்கு பரிகாரம் செய்ய செல்கிறார். இந்நிலையில் கஷ்டப்பட்டு அவர் பரிகாரம் செய்ய அதன் மூலம் அவருக்கு கரு உண்டாகிவிடுகிறது. அதனால் குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல மாற்றங்கள் வரப் போகிறது. முல்லை கதிருக்கு குழந்தை இல்லை என்பதால் குடும்பமே அதை நினைத்து வருத்தமாக இருக்கின்றனர். முல்லைக்கு செயற்கை முறையில் குழந்தை பிறக்க வைக்கலாம் என முடிவு செய்ய அதற்கு பல லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்கிறார். அதனால் முல்லை அம்மா அப்பா வருத்தத்தில் இருக்க மூர்த்தியும் தனமும் புது வீடு வாங்கும் திட்டத்தை கைவிட்டு முல்லைக்கு மருத்துவம் பார்க்க முடிவு செய்கின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முடிய போகிறதா? விரைவில் தொடங்கும் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் மீனாவிற்கு வருத்தமாக இருக்கிறது. முல்லை மீனா பேசுவதை கேட்டுவிட அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பார்க்க முடியுமா என நினைக்கிறார். ஆனால் அதற்கும் வழி இல்லை என்பதால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அந்த நேரம் கஸ்தூரி கோவில் ஒன்றை பற்றி சொல்கிறார். அங்கே சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என சொல்ல, முல்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் முல்லையின் அம்மா வேண்டாம் உன்னால் முடியாது என சொல்கிறார்.
முல்லை கதிரிடம் அது பற்றி சொல்ல கதிரும் வேண்டாம் என சொல்கிறார். அதனால் முல்லை கதிர் மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்கிறார். மிகவும் கடினமான பரிகாரத்தை செய்து முடிக்க அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. அதனால் குடும்பமே சந்தோசத்தில் இருக்க போகின்றனர். இதெல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் முல்லைக்கு குழந்தை பிறப்பதை நினைத்து கதிர் எப்படி சந்தோஷப்படுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.