தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பழைய கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு!
பழைய கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு:
தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அனுமதியளித்துள்ளது. அதன்படி, SSLC படித்த அரசு ஊழியர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் அடிப்படையில் 10,000 அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
2024 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் – கால அட்டவணை வெளியீடு.. விவரம் உள்ளே!
இதற்கு முன்பு, அரசு பணியாளர்கள் மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு ஊழியர்கள் பாதிப்படைந்த நிலையில் தற்போது பழைய கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதன் பின்னர் அரசு ஊழியர்கள் படிப்படியாக தங்களது கல்வி தகுதியை உயர்த்திக் கொள்ளும்படியும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித்தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.