விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் களமிறங்கிய “ராஜபார்வை” நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் ஹீரோவாக நடித்த ப்ரஜின் சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக “காற்றுக்கென்ன வேலி” சீரியல் முன்னா களமிறங்கி இருக்கிறார்.
வைதேகி காத்திருந்தாள்:
வைதேகி காத்திருந்தாள் சீரியல் கடந்த மாதம் முதல் விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. பெரிய பணக்கார வீட்டு பெண்ணின் ஒரே மகளின் பேத்தியை காணாமல் குடும்பமே தவிக்க அவள் ஒரு திருடனிடம் இருக்கிறாள். அவள் இவளை காசு கொண்டுவரும் பொருளாக மட்டுமே பார்க்க, அவளுடைய சொந்த குடும்பத்திற்கே அவளை நடிக்க வர சொல்கின்றனர். ஆனால் அவள் வந்ததும் தன்னுடைய அம்மா முகத்தை பார்த்து இது தன்னுடைய குடும்பம் என நினைக்க தன்னுடைய சொந்த அத்தை பையன் மீது காதலில் விழுகிறார்.
இதில் இருந்து இந்த சீரியல் கதை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ப்ரஜின் நடித்து வந்தார். மேலும் ஹீரோயினாக சரண்யா நடித்து வருகிறார். இந்நிலையில் ப்ரஜின் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு அதிகமாக வரும் பட வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
தாய் மாமா முறை செய்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!
தற்போது அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பின்னர் விலகிய நடிகர் முன்னா களமிறங்கி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். முன்னா இந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார். இருந்தாலும் ப்ரஜின் இந்த சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.