விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அஞ்சலி ஸ்வீட்டி விலகியது இதற்காக தான்? அவரே அளித்த பதில்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து அஞ்சலி ஸ்வீட்டி விலகியது இதற்காக தான்? அவரே அளித்த பதில்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து அஞ்சலி ஸ்வீட்டி விலகியது இதற்காக தான்? அவரே அளித்த பதில்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அஞ்சலி ஸ்வீட்டி விலகியது இதற்காக தான்? அவரே அளித்த பதில்!

தற்போது விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி இருக்கும் நடிகை ஸ்வீட்டி, அதற்கான காரணத்தை ஒரு பதிவின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை அஞ்சலி ஸ்வீட்டி:

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஸ்வீட்டி. தமிழ் சின்னத்திரைக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்வீட்டி இந்த சீரியலின் ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து காலப்போக்கில் பாசிடிவ் ஆக காட்டப்பட்டு வந்த இவரது அஞ்சலி கதாப்பாத்திரம் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறியது. அதே போல நடிப்பிற்கு இது தான் முதல் முறை என்றாலும் தனக்குரிய வேலையை சிறப்பாக செய்து வந்தார் ஸ்வீட்டி.

தாய் மாமா முறை செய்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் சுமார் 700 எபிசோடுகளாக பயணித்து வந்த ஸ்வீட்டி தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இது தொடர்பான தகவலை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்த அவர், விரைவில் புதிய சீரியலில் மக்களை சந்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்வீட்டி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து சில தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் எனக்கு கிடைத்த முதல் ப்ராஜக்ட்.

நான் இந்த சீரியல் முடியும் வரைக்கும் அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியவில்லை. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விட்டு தான் வேறு சீரியலில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தது போன மாதத்தில் தான். அதனால், நான் இனி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியாக உங்களை மகிழ்விக்க முடியாது. வேறு ஒரு கேரக்டராக வருவேன். இப்போது நான் நடிக்க இருக்கும் புதிய சீறியலின் கதாப்பாத்திரம் ஸ்வீட்டியை போன்றது தான். நிறைய சீரியல் கதைகள் கேட்டிருக்கிறேன் அதில், இந்த கதை எனக்கு பிடித்திருந்தது.

அதனால் ஒப்புக்கொண்டேன். என்னை பார்க்கும் போது, பலரும் கேட்கும் கேள்வி, இப்போதெல்லாம் உங்களை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அதிகமாக பார்க்க முடிவதில்லையே ஏன் என்று தான். அந்த வருத்தம் எனக்கும் இருந்தது. சீரியலின் ஆரம்பத்தில் எனக்கு நிறைய ஸ்கோப் கிடைத்தது. எனக்கும் அதை நன்றாக செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் அஞ்சலி கதாப்பாத்திரம் நல்லவராக காட்டப்பட்ட பின்னர், எனது கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் இல்லாததாக மாறி விட்டது.

குடும்பத்தை அக்கறையுடன் பார்க்கும் பாக்கியா, கண்கலங்கிய ஈஸ்வரி – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!

நான் ஷூட்டிங் போகும் போதெல்லாம், இன்றைக்கு என்ன கதை இருக்கும், எப்படி நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் போய் பல நாட்கள் ஏமாந்து வந்திருக்கிறேன். அதனால், எனக்கான இடத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அது இப்போது அமைந்திருக்கிறது. நானும், அகிலனும் ஒன்றாக வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால் கதை அமைந்தால் அதை செய்யலாம். எனக்கும் சில சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் சொல்கிறேன் என்று உற்சாகமாக கூறி இருக்கிறார் நடிகை ஸ்வீட்டி.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!