மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை? அரசு பதில் அளிக்க உத்தரவு!

0
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை? அரசு பதில் அளிக்க உத்தரவு!
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை? அரசு பதில் அளிக்க உத்தரவு!
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை? அரசு பதில் அளிக்க உத்தரவு!

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மிருகவதை தடை சட்டம்:

மிருகங்கள் துன்பறுத்தப்படுவதை தடுப்பதற்காக மிருகவதை தடை சட்டம் இயங்கி வருகிறது. இந்நிலையில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. காலம் காலமாக மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாடுகளின் மூக்கில் மூக்கணாங்கயிறு போடப்பட்டு வருகிறது. அதை எதிர்த்து சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 15 கடைசி நாள்!

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் வழக்கு குறித்து கூறப்பட்டதாவது, மாடுகள் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டை போட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடை சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உலகளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும், இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!