அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 15 கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் எம்.பில்., ஆகிய முதுகலை படிப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.எஸ்சி., எம்.பில்., ஆகிய பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிட்டதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியுடன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது.
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் – முழு விபரம்!
மேலும் 1,54,389 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,05,597 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் அடுத்ததாக முதுகலை படிப்புகளுக்கு சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
2 ஆண்டு எம்.எஸ்சி., படிப்பு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.ஃபில்., ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://admissions.annauniv.edu/cfa/images/MSC_Advt_2021.jpg என்ற இணைய பக்கத்தில் முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பு குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.