குடும்ப வன்முறை தடை சட்டம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் குடும்ப வன்முறை தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் வெளி நாட்டில் வாழும் பெண்களும் வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடும்ப வன்முறை தடை சட்டம்:
இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு எண்ணற்ற சட்டங்களை உருவாக்கியுள்ளது. இச்சட்டங்கள் வாயிலாக இன்று பெண்கள் நாட்டில் அனைத்து உரிமையும் பெற்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். பெண்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களில் ஒன்று குடும்ப வன்முறை தடை சட்டம். சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இத்தகைய பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் குடும்ப வன்முறை தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகள் தொடக்கம் – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
கடந்த 1999 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிரண்குமார், உஷா ஆகியோர் அமெரிக்காவில் குடியேறிய பின் விவாகரத்து பெற்றனர். இவர்களின் 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க கோரி மனைவி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டி கணவர் கிரண்குமார் மனு தாக்கல் செய்தார். இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று உயர் நீதிமன்றம், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளது.